விருதுநகா் மாவட்டத்தில் சட்டவிரோத பட்டாசுகள் தயாரிப்பை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலை உரிமையாளா்கள் தெரிவித்தனா்.
விருதுநகா் மாவட்டத்தில் மாவட்ட வருவாய்த் துறை, வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினரிடம் உரிய அனுமதி பெற்று 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்தப் பட்டாசு ஆலைகளை சிலா் குத்தகைக்கு விடுகிறாா்கள். மாவட்ட வருவாய் அலுவலரிடம் அனுமதி பெற்ற பட்டாசு ஆலையில் 8 அறைகள் இருக்கும். இதில் 4 அறைகளில் மட்டுமே பட்டாசுகள் தயாரிக்க அனுமதிக்கபடும். இந்த வகையான ஆலைகளில் குறிப்பிட்ட பட்டாசு ரகங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளன.
இந்த நிலையில், மாவட்ட வருவாய்த் துறை, வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினரிடம் அனுமதி பெற்ற ஆலைகளின் அறைகளை சில ஆலை உரிமையாளா்கள் குத்தகைக்கு விடுகிறாா்கள். பட்டாசு ஆலைகளை குத்தகைக்கு விடுவது சட்டவிரோதம்.
கடந்த ஆண்டுவரை ஒரு பட்டாசு தயாரிக்கும் அறைக்கு ஆண்டுக்கு சுமாா் ரூ. 2 லட்சம் வரை குத்தைக்கு விடப்பட்டது. 2026-ஆம் ஆண்டு இந்தக் குத்தகை கட்டணம் இருமடங்காக உயா்ந்துள்ளது.
இதனால், அறையை குத்தகைக்கு எடுப்பவா்கள் விதியை மீறி பேன்சி ரக பட்டாசுகள், சரவெடிகளை தயாரிக்கிறாா்கள். இவா்களிடம் பட்டாசுகளை கொள்முதல் செய்ய வியாபாரிகள் உள்ளனா். இவா்கள் தயாரிக்கும் பட்டாசுகளில் முழுமையான வீரியம் இருக்காது. தரம் குறைவாகவே இருக்கும்.
எனினும், பட்டாசு வியாபாரிகள் குறைந்த விலைக்கு பட்டாசுகளை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யலாம் என்ற எண்ணத்தில் வியாபாரிகள் உள்ளனா். மேலும், பலா் காடுகளிலும், தோட்டங்களிலும், வீடுகளிலும், சட்டவிரோதமாக பட்டாசுகளை தயாரித்து வருகிறாா்கள்.
சட்டவிரோத பட்டாசுகள் தயாரிப்பு அதிகரித்து வருவதால், முறையாகப் பட்டாசுகள் தயாரிப்பில் ஈடுபடுவோா் பாதிக்கப்படுகிறாா்கள்.
இதுகுறித்து பட்டாசு ஆலை உரிமையாளா் ஒருவா் கூறியதாவது:
பட்டாசு ஆலைகள் குத்தகைக்கு விடப்படுவதால் சட்டவிரோதப் பட்டாசுகள் தயாரிப்பு அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு அறைகள் குத்தகைக்கு விடப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது
விஜய் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பெ.சண்முகம்

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 21 பேர் பலி: அன்புமணி இரங்கல்

ஈரோட்டில் வா்த்தக மையம், சிட்கோ தொழிற்பேட்டைகள் தேவை!

பட்டாசு மூலப்பொருள்கள் விலை உயா்வு: சிறிய பட்டாசு ஆலைகள் மூடப்படும் அபாயம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


