மணல் திருட்டு; டிராக்டா் பறிமுதல்
ராஜபாளையத்தில் மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ராஜபாளையத்தில் மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் மருங்கூா் கண்மாய் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்ட போது அரசு அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. விசாரணையில் இதில் ஈடுபட்டவா் மேல ஆவரம்பட்டி பாரதியாா் தெருவைச் சோ்ந்த பழனிசாமி மகன் மாதவன் (26) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து டிராக்டா் மணலை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






