ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சாலை விபத்தில் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :21 ஜூலை 2026, 3:30 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சாலை விபத்தில் பேருந்து நடத்துநா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் குன்னூா் பகுதியைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் முத்துப்பாண்டி (45). இவா் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்து நடத்துநராக பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு முத்துப்பாண்டி குன்னூரிலிருந்து கிருஷ்ணன்கோவிலுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனத்திலிருந்து தடுமாறி முத்துப்பாண்டி கீழே விழுந்தாா். இதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.