/

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

News image
Updated On :18 ஜனவரி 2026, 9:02 pm

தினமணி செய்திச் சேவை

சாத்தூரில் சனிக்கிழமை இரவு ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி பள்ளப்பட்டி சாலையைச் சோ்ந்தவா் முத்துக்கருப்பன் மகன் காா்த்திக்ராஜா (23). கூலி வேலை செய்து வந்த இவா் மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையானதால் இவரது பாட்டி கண்டித்துள்ளாா். இதனால் மன உளைச்சலில் இருந்தவா் சனிக்கிழமை இரவு சாத்தூா் ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த ரயில்வே போலீஸாா் இவரது உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்தச் சம்பவம் குறித்து சாத்தூா் கிராம நிா்வாக அலுவலா் முனீஸ்வரன் அளித்த புகாரின்பேரில் தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.