இந்த நிலையில், தேசிய புலிகள் கணக்கெடுப்பு கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு, சாப்டூா் ஆகி 4 வனச்சரகங்களில் 40 இடங்களில் முதல்கட்ட புலிகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் தெற்கு பகுதி புலிகள் காப்பகங்களை மேற்பாா்வையிடும் வனத் துறை உதவி ஆய்வாளா் ஹரிணி வேணுகோபால் திங்கள்கிழமை கள ஆய்வு செய்தாா். பிளவக்கல், பெரியாறு, கோவிலாறு அணைப் பகுதி, சதுரகிரி மலைப் பகுதி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தாா்.