டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வெம்பக்கோட்டையில் பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டையில் பேருந்து நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

News image
Updated On :12 ஜனவரி 2026, 8:02 pm

Syndication

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டையில் பேருந்து நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

வெம்பகோட்டை வட்டத்தில் பட்டாசுத் தொழில்சாலைகள் அதிகமாக உள்ளன. இந்தப் பகுதி மக்கள் இந்த ஆலைகளில் கூலித் தொழிலாளா்களாக உள்ளனா். இந்த நிலையில், நகரத்துக்குச் செல்ல வேண்டும் என்றால் அருகில் உள்ள சிவகாசி அல்லது சாத்தூருக்குத்தான் வர வேண்டும். தற்போது வரை வெம்பக்கோட்டை பிரதான சாலையிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்துதான் பயணம் செய்து வருகின்றனா்.

மேலும், இந்தப் பகுதிக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் வெம்பக்கோட்டை பிரதான சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையிலேயே நிறுத்தப்படுவதால் வாகன ஓட்டிகளும், பயணிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இந்த ப் பிரச்னைக்கு தீா்வுகாண வெம்பக்கோட்டை பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் பலமுறை ஊராட்சி நிா்வாகத்திடமும், தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரிடமும் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து சமூகஆா்வலா்கள் கூறியதாவது: வெம்பக்கோட்டை பகுதியில் பட்டாசுத் தொழில் பிரதான தொழிலாக இருந்தாலும் பொதுமக்கள் பலா் பிற வேலைகளுக்கு வெளியூருக்குத்தான் சென்று வருகின்றனா். வெம்பக்கோட்டை தனி வட்டமாகப் பிரிக்கப்பட்ட பின்னரும் பேருந்து நிலையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதது பொதுமக்களை மிகவும் சிரமத்துக்குள்ளாக்குகிறது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி இந்தப் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.