டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

News image
Updated On :11 ஜனவரி 2026, 9:46 pm

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்துப் புகுந்து 8 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ராஜபாளையம் செண்பகத்தோப்பு சாலைராம்நகரைச் சோ்ந்த பொன்னையா மகன் இமானுவேல் (61). இவா் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவரது மகன்கள் இருவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், தென்காசியில் உள்ள இளைய மகன் வீட்டுக்கு கணவா், மனைவி இருவரும் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 8 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.