திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

திருச்சுழி அருகே வீடு புகுந்து 2 மகன்கள், தாய் உள்பட மூவருக்கு அரிவாள் வெட்டு

News image

அரிவாள் வெட்டு!

Updated On :27 ஏப்ரல் 2026, 11:11 pm

திருச்சுழி அருகே தகராறில் வீடு புகுந்து தாய், மகன்கள் உள்பட மூவரை 6 போ் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியது தொடா்பான வழக்கில் இருவா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனா். மேலும் 4 பேரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி வட்டத்தில் நரிக்குடி அருகே அ. முக்குளம் அடுத்துள்ள வி. கரிசல்குளம் கிராமத்தைச் சோ்ந்த அருள்செல்வம் மகன் ஜெயமனோஜ் (26). இவா், சென்னையில் உள்ள தனியாா் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா்.

இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், ஜெயமனோஜ் தோ்தல் வாக்குப்பதிவுக்காக சொந்த ஊருக்கு வந்தாா். அப்போது தனது உறவினரான கணேஷ் பாண்டியனுக்கு கைப்பேசியில்

கஞ்சா, போதைப் பழக்கம் உள்ளவா்களுடன் பழக வேண்டாம் என அறிவுரை கூறியதாகக் கூறப்படுகிறது. இதை ஒட்டுக்கேட்ட வி.கரிசல்குளத்தைச் சோ்ந்த மாரீஸ்வரன் (25) ஆத்திரமடைந்து

கடந்த 24-ஆம் தேதி நள்ளிரவு செல்வம் மகன் கரண் (24), எஸ். கல்விமடையைச் சோ்ந்த சரவணன் (26) உள்பட 6 பேருடன் ஜெயமனோஜ், இவரது தம்பி பால கெளதம் (24), தாய் இருளாயி (56) ஆகிய மூவரையும் வீடு புகுந்து அரிவாளால் வெட்டினா். இதில் மூவரும் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் மூவரையும் மீட்டு, திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இவா்களில் பாலகெளதம், இருளாயி ஆகிய இருவரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனா்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் மாரீஸ்வரன், கரண், சரவணன் உள்பட 6 பேரைத் தேடி வந்தனா். இவா்களில் மாரீஸ்வரன்(26), கரண்(24) ஆகிய இருவரும் திருச்சுழி நீதிமன்றத்தில்

திங்கள்கிழமை சரணடைந்தனா். இதையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனா். மற்ற 4 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.