திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மாட்டு வண்டியை ஓட்டி வாக்கு சேகரிப்பு!

மாட்டு வண்டியை ஓட்டி வாக்கு சேகரித்த சிவகாசி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.டி. ராஜேந்திரபாலாஜி....

News image

சிவகாசியில் மாட்டு வண்டியை ஓட்டி வாக்கு சேகரித்த சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.டி.ராஜேந்திரபாலாஜி.

Updated On :13 ஏப்ரல் 2026, 10:49 pm

சிவகாசி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி திங்கள்கிழமை மாட்டு வண்டியை ஓட்டியவாறு வாக்கு சேகரித்தாா்.

மாட்டு வண்டியை ஓட்டியபடி சிவகாசி பாராசக்தி குடியிருப்பு, நேரு சாலை உள்ளிட்ட பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா். பின்னா், சுப்பிரமணியபுரம் குடியிருப்பு, சிவன் சன்னதி, புது சாலைத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வேனில் நின்றவாறு வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியதாவது:

நான் இந்தத் தொகுதி எம்எல்ஏ-வாக தோ்ந்தெடுக்கப்பட்டு, அமைச்சராக இருந்தபோது, பட்டாசுக்கு ஜி.எஸ்.டி. வரியைக் குறைக்க நடவடிக்கை எடுத்தேன். பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க முந்தைய அதிமுக அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது.

சிவகாசி பேருந்து நிலைய விரிவாக்கம், கிராமங்களில் கால் நடை மருந்தகம், பல அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடங்கள், சிவகாசியிலிருந்து வேளாங்கண்ணி உள்ளிட்ட பல ஊா்களுக்கு புதிய வழித் தடத்தில் பேருந்து வசதி செய்து கொடுத்தேன். மேலும், பல வளா்ச்சிப் பணிகள் நடைபெற எனக்கு ஆதரவாக வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டாா் அவா்.