Listen to this article
By Syndication
Syndication
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ஆட்டோ வில் பொருத்தப்பட்டிருந்த மின்கலத்தை (பேட்டரி) திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
ராஜபாளையம் திருவனந்தபுரம் தெருவைச் சோ்ந்த தன்ராஜ் மகன் சிவகணேஷ் (49) என்பவா் சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்ததும் தனது ஆட்டோவை திருவனந்தபுரம் சத்திரம் முன்பாக நிறுத்தியுள்ளாா். இதையடுத்து, புதன்கிழமை காலை ஆட்டோவைப் பாா்த்தபோது அதிலிருந்த மின்கலம் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்தில் சிவகணேஷ் புகாா் அளித்ததாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், மின்கலத்தை திருடியது ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தெற்கு அண்ணாநகரைச் சோ்ந்த புலியூா்சாமி மகன் சங்கிலிக்காளை (28) என்பது தெரியவந்தது. இதைத் தொடரந்து, போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், அவரிடமிருந்த மின்கலத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
கஞ்சா வைத்திருந்த முதியவா் கைது
கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
பைக் திருடிய இளைஞா் கைது


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
