ஆரம்பக் காலகட்டங்களில், பெரிய பெரிய கைக் கோடாரியைப் பயன்படுத்தி விலங்குகளை வேட்டையாடிய பழைய கற்கால மக்கள், நாளடைவில் விலங்குகளுடன் போராடுதல், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் அவர்களைச் சிந்திக்கத் தூண்டியது. அதன்விளைவே, விலங்குகளை வேட்டையாடுவதைத் தவிர்த்தான். பின்னர், தீங்கு விளைவிக்காத, வீட்டு விலங்குகளை மட்டுமே வேட்டையாட எத்தனித்தான். வீட்டு விலங்குகளை வேட்டையாட பெரிய கற்கருவிகள் தேவைப்படவில்லை. தேவைக்கேற்ப, கற்கருவிகளின் அளவைக் குறைத்து, சிறிய நுண் கற்கருவிகளைத் தயாரித்து வேட்டைக்கும், தன் தேவைக்கும், பயன்படுத்த ஆரம்பித்தான். இதுதான், நுண் கற்காலம். ஏனெனில், கற்கால வரலாற்றிலேயே சிறிய சிறிய சில்லுகளைக் கொண்டு மிகவும் நுண்ணிய கற்கருவிகளை மட்டுமே தயாரித்து, தங்களது வாழ்க்கைக்குப் பயன்படுத்தி சில காலம் வாழ்ந்துள்ளனர். அத்தகைய காலகட்டம், வரலாற்றில் ஒரு தனியிடத்தைப் பெறுவதில் தவறில்லை.