/

செ.குளோரியான்

பாடல் - 1

உருகுமால் நெஞ்சம், உயிரின் பரம் அன்றி
பெருகுமால் வேட்கையும், என்செய்கேன் தொண்டனேன்,
தெருவெல்லாம் காலி கமழ் திருக்காட்கரை
மருவிய மாயன்தன் மாயம் நினைதொறே.

தெருக்களிலெல்லாம் செங்கழுநீர் மலர்ந்து மணம் வீசுகிற திருக்காட்கரையிலே எழுந்தருளியிருக்கும் மாயனுடைய மாயத்தை நினைக்க நினைக்க, நெஞ்சம் உருகுகிறது, உயிரால் தாங்க இயலாத அளவுக்கு விருப்பம் பெருகுகிறது, தொண்டனான நான் என்ன செய்வேன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.