தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

செ.குளோரியான்


பாடல் - 11

தேனை, நல் பாலை, கன்னலை, அமுதை,
திருந்து உலகு உண்ட அம்மானை,
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ்
மலர்மிசைப் படைத்த மாயோனை,
கோனை வண் குருகூர் வண் சடகோபன்
சொன்ன ஆயிரத்துள் இப்பத்தும்
வானின்மீது ஏற்றி அருள்செய்து முடிக்கும்
பிறவி மாயக்கூத்தினையே.

தேனைப்போல், நல்ல பாலைப்போல், கரும்புச்சாறுபோல், அமுதைப்போல் சுவையானவன், சிறந்த உலகை உண்ட அம்மான், தன்னுடைய குளிர்ந்த, மலர்ந்த திருநாபித் தாமரையிலே உயர்ந்த நான்முகனான பிரம்மனைப் படைத்த மாயோன், நம் தலைவன், எம்பெருமான், அத்தகைய பெருமானை, வளம் மிகுந்த குருகூர் வள்ளல் சடகோபன் ஆயிரம் திருப்பாடல்களால் பாடினார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களும், தம்மைப் பாடுவோரைப் பரமபதத்துக்குக் கொண்டுசென்று அருள்செய்யும், பிறவி என்னும் மாயக்கூத்தை முடித்துவைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.