தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

செ.குளோரியான்


பாடல் - 9

திருமால்! நான்முகன், செஞ்சடையான் என்ற இவர்கள் எம்
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார்? பேசி என்?
ஒரு மா முதல்வா, ஊழிப்பிரான், என்னை ஆளுடை
கருமாமேனியன் என்பன் என் காதல் கலக்கவே.

திருமாலே, நான்முகனான பிரம்மா, சிவந்த சடையைக்கொண்ட சிவன் என்னும் இவர்கள் இருவரும் எம்பெருமானாகிய உன்னுடைய தன்மையை அறிவார்களா? (அறியமாட்டார்கள்.) இதைப்பற்றிப் பேசி என்ன பயன்? (ஏதுமில்லை.)  எம்பெருமானே, உன்மீது அன்பு பெருகுவதால், ‘தனித்துவமான, சிறந்த முதல்வனே, ஊழிப்பிரானே, என்னை ஆளுகின்ற கருத்த, சிறந்த திருமேனியனே’ என்றெல்லாம் நான் சொல்வேன்.

பாடல் - 10

கலக்கம் இல்லா நல் தவமுனிவர், கரைகண்டோர்,
துளக்கம் இல்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்,
மலக்கம் எய்த மாகடல்தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ்கிற்பது என்செய்வது, உரையீரே.

கலக்கமில்லாத நல்ல தவ முனிவர்கள், பிறவிக்கடலின் கரையைக் கண்ட முக்தர்கள், குறைதலில்லாத வானோர்கள் என எல்லாரும் எம்பெருமானைத் தொழுவார்கள், பெரிய கடலே கலங்கும்படி அதனைக் கடைந்த அந்தப் பெருமானின் தன்மைகளை நாம் முழுமையாகப் புகழ்ந்து சொல்லிவிடமுடியுமா? நீங்களே சொல்லுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.