தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

செ.குளோரியான்


பாடல் - 7

வருவார், செல்வார், வண் பரிசாரத்து இருந்த என்
திருவாழ்மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வது என்,
உருஆர் சக்கரம், சங்கு சுமந்து இங்கு உம்மோடு
ஒருபாடு உழல்வான் ஓர் அடியானும் உளன் என்றே?

மக்கள் பலர் திருவண்பரிசாரத்துக்குச் செல்கிறார்கள், வருகிறார்கள், ஆனால், அவர்களில் ஒருவர்கூட, அங்கே எழுந்தருளியிருக்கும் எம்பெருமானிடம் என்னைப்பற்றிச் சொல்வதில்லையே, திருமகள் வாழும் மார்பைக்கொண்ட அப்பெருமானிடம், ‘அழகிய சக்ராயுதம், சங்கைச் சுமந்துகொண்டு நீங்கள் உலகைக் காக்கச் செல்லும்போது, உங்களோடு வந்து பணிவிடை செய்யக்கூடிய ஓர் அடியவன் இருக்கிறான்’ என்று யாரேனும் என்னைப்பற்றிச் சொல்லமாட்டார்களா? நான் என்ன செய்வேன்?

பாடல் - 8

என்றே என்னை உன் ஏர் ஆர் கோலம் திருந்து அடிக்கீழ்
நின்றே ஆட்செய்ய நீ கொண்டு அருள நினைப்பதுதான்,
குன்று ஏழ், பார் ஏழ், சூழ்கடல், ஞாலம் முழு ஏழும்
நின்றே தாவிய நீள்கழல் ஆழித் திருமாலே.

ஏழு மலைகள், ஏழு தீவுகள், ஏழு கடல்கள், ஏழு உலகங்கள் ஆகிய அனைத்தையும் நின்றபடியே தாவி அளந்த பெருமானே, நீண்ட திருவடிகளையுடைய, சக்ராயுதத்தை ஏந்திய திருமாலே, உன்னுடைய அழகிய திருவடியின்கீழ் என்னை ஏற்றுக்கொண்டு, உனக்கு அடிமை செய்யுமாறு எனக்கு நீ அருள்வது எந்நாளோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.