/

செ.குளோரியான்

பாடல் - 11

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான்தன்னை
கொடிமதிள் தென்குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே.

விரைந்து கம்சனைக் கொன்ற பெருமானைப்பற்றி, கொடிகள் பறக்கும் மதிள்களைக்கொண்ட தென்குருகூர்ச் சடகோபன் சொன்ன அழகிய ஆயிரம் திருப்பாடல்களிலே இந்தப் பத்து பாடல்களையும் சொன்னால் பிறவி நோய் தீரும், கானல்நீர் போன்ற உலக வாழ்க்கை நாசமடையும், காணுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.