/

செ.குளோரியான்


பாடல் - 3

தொண்டர், நும் தம் துயர் போக நீர் ஏகமாய்
விண்டு வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்,
வண்டு பாடும் பொழில் சூழ் திருக்கண்ணபுரத்து
அண்டவாணன், அமரர் பெருமானையே.

தொண்டர்களே, உங்களுடைய துயரங்களெல்லாம் போகவேண்டுமென்றால், வண்டுகள் இசை பாடும் பொழில்களால் சூழப்பட்ட திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும் பரமபதநாதன், தேவர்களின் பெருமான், எம்பெருமானை வணங்குங்கள், மலர்ந்து, வாடாத (புதிய) மலர்களை அவருடைய திருப்பாதங்களில் இட்டு இறைஞ்சுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.