

பாடல் 11
அவனை விட்டு அகன்று உயிர் ஆற்றகில்லா
அணி இழை ஆய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டு அகல்வதற்கே இரங்கி
அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனி உண்டு உமிழ்ந்தவன்மேல் உரைத்த
ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர்,
அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே.
எம்பெருமானை விட்டுப் பிரிந்து உயிர்வாழ இயலாத, அழகிய நகைகளை அணிந்த ஆய்ச்சியர்கள், மாலைநேரத்தில் அப்பெருமானை எண்ணி இரங்கிப் பாடுகிறார்கள், எம்பெருமானைப் பிரிந்து அவர்கள் அனுபவிக்கும் துயரத்தை உணர்ந்த, அழகிய குருகூர்ச் சடகோபன் மாறன், உலகை உண்டு, உமிழ்ந்த அப்பெருமான்மீது ஆயிரம் திருப்பாடல்களைப் பாடினார். இறைவனின் தொண்டர்களே, மாறன் பாடியவற்றில் இந்தப் பத்து பாடல்களையும் உலகிலே சொல்லுங்கள், அவர் சொன்ன அந்தத் திருமாலை நெருங்கித் தொழுது வணங்கி உய்யுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

