தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

செ.குளோரியான்


பாடல் - 1

ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றம்கொலோ, அறியேன்,
ஆழி அம் கண்ணபிரான் திருக்கண்கள்கொலோ, அறியேன்,
சூழவும் தாமரை நாள்மலர்போல் வந்து தோன்றும் கண்டீர்,
தோழியர்காள், அன்னையீர், என்செய்கேன், துயராட்டியேனே.

தோழியரே, தாய்மார்களே, என்னைச் சுற்றிலும் அன்று மலர்ந்த தாமரையைப்போல வந்து தோன்றுகின்றவை, சக்கரப்படையைக் கையில் ஏந்திய அழகிய கண்ணபிரானின் திருக்கண்களா? அல்லது, பெண்களுடைய ஆவியை உண்ணும் இரண்டு எமன்களா? தெரியவில்லையே. எம்பெருமான் என்னை இப்படித் துயரப்படுத்தினால் நான் என்ன செய்வேன்?

***

பாடல் - 2

ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர், என்னை நீர் நலிந்து என்?
மாட்டு உயர் கற்பகத்தின் வல்லியோ, கொழுந்தோ, அறியேன்,
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு, எனது ஆவியுள்ளே
மாட்டிய வல்விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே.

தாய்மார்களே, என்னை நீங்கள் வருத்தியும், தூற்றியும் நலிவதால் என்ன பயன்? (ஏதுமில்லை.) திரட்டிய வெண்ணெயை உண்ட கண்ணபிரானின் திருமூக்கு, பக்கத்திலே உயர்ந்த கற்பகக்கொடியோ? கொழுந்தோ? நான் அறியேன். அந்தத் திருமூக்கு என்னுடைய ஆவியினுள்ளே ஏற்றிய வலிமையான விளக்கின் சுடராக நிற்கும் பெருமையைக்கொண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.