தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

செ.குளோரியான்


பாடல் - 1

பா மரு மூ உலகும் படைத்த பற்பநாபாவோ,
பா மரு மூ உலகும் அளந்த பற்பபாதாவோ,
தாமரைக் கண்ணாவோ, தனியேன் தனி ஆளாவோ,
தாமரைக் கையாவோ, உன்னை என்றுகொல் சேர்வதுவே.

பரப்பையுடைய மூன்று உலகங்களையும் படைத்த பற்பநாபனே, பரப்பையுடைய மூன்று உலகங்களையும் அளந்த தாமரைத் திருவடிகளைக் கொண்டவனே, தாமரை போன்ற திருக்கண்களைக் கொண்டவனே, தனித்திருக்கும் என்னைத் தனியே ஆள்பவனே, தாமரை போன்ற திருக்கைகளைக் கொண்டவனே, நான் உன்னை என்றைக்குச் சேர்வேன்!

***

பாடல் - 2

என்றுகொல் சேர்வது, அந்தோ, அரன், நான்முகன் ஏத்தும் செய்ய
நின் திருப்பாதத்தை யான்? நிலம், நீர், எரி, கால், விண், உயிர்
என்ற இவைதாம் முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ,
குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ.

எம்பெருமானே, நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம், உயிர் தொடங்கி அனைத்துமாக நின்ற எங்கள் தந்தையே, ஆநிரைகளை மேய்த்தவனே, பெருமழை வந்தபோது கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்து அவற்றைக் காத்தவனே, எங்கள் கூத்தனே, சிவனும் பிரம்மனும் போற்றுகிற செம்மையான உன்னுடைய திருப்பாதத்தை நான் என்றைக்குச் சேர்வேன்? அடடா!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.