தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

செ.குளோரியான்


பாடல் - 7

மாறு நிரைத்து இரைக்கும் சரங்களின்
நூறு பிணம் மலைபோல் புரளக் கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே.

எம்பெருமான், நம் அப்பன், இலங்கையைப் பொடிப்பொடியாக்கும்படி வென்றான், அதற்காக அவன் நான்கு திசைகளிலும் வரிசையாக அம்புகளைச் செலுத்த, அதனால் பெரிய ஓசை எழுந்தது, அசுரர்களின் நூற்றுக்கணக்கான பிணங்கள் மலைபோல் புரண்டு விழுந்தன, கடலில் சேர்ந்த இரத்த வெள்ளம் ஆறுகளில் பாய்ந்தது. இப்படி அற்புதமானமுறையில் இலங்கையை வென்றான் பெருமான்.

***

பாடல் - 8

நேர் சரிந்தான் கொடிக்கோழி கொண்டான், பின்னும்
நேர் சரிந்தான் எரியும் அனலோன், பின்னும்
நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி, கண்டீர், அப்பன்
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே.

எம்பெருமான், நம் அப்பன், தன்னெதிரே வந்து மோதித் தோற்றவனான வாணனுடைய வலிமையான தோள்களை அழித்தான், அப்போது, கோழிக்கொடியைக் கொண்ட முருகனும் பெருமானோடு மோதித் தோற்றான், பின்னர், எரிகின்ற அக்கினிக்கடவுளும் பெருமானோடு மோதித் தோற்றான், மூன்று கண்களையுடைய மூர்த்தியாகிய சிவபெருமானும் பெருமானோடு மோதித் தோற்றான், அதைக் காணுங்கள்/ அறிந்துகொள்ளுங்கள். இப்படி அற்புதமானமுறையில் வாணனை வென்றான் பெருமான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.