தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

செ.குளோரியான்

பாடல்-  3

நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே, பின்னும்
நான்றில ஏழ்மலை தானத்தவே, பின்னும்
நான்றில ஏழ்கடல் தானத்தவே, அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே.

எம்பெருமான், நம் அப்பன் வராக அவதாரமெடுத்து, பூமியைக் குத்தி இடந்து தன்னுடைய கொம்பிலே கொண்ட நாளிலே, ஏழு தீவுகளும் நழுவவில்லை, அதனதன் இடத்திலேயே இருந்தன, ஏழு மலைகளும் சலிக்கவில்லை, அதனதன் இடத்திலேயே இருந்தன, ஏழு கடல்களும் உடைந்து ஓடவில்லை, அதனதன் இடத்திலேயே இருந்தன. இப்படி அற்புதமானமுறையில் பூமியை இடந்தெடுத்தான் பெருமான்.

***

பாடல் -4

நாளும் எழ, நிலம், நீரும் எழ, விண்ணும்
கோளும் எழ, எரி, காலும் எழ, மலை
தாளும் எழ, சுடர் தானும் எழ, அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே.

எம்பெருமான், நம் அப்பன் உலகை உணவாக உண்டபோது, பெரும் ஆரவாரம் எழுந்தது, நாள் வேறுபாடு அற்றுப்போனது, நிலம், நீர் என்கிற வேறுபாடு மறைந்தது, வானம், கோள்கள், நெருப்பு, காற்று ஆகியவை மறைந்தன, மலைகள் வேரோடு விழுந்தன, சுடர்கள் அடங்கின. இப்படி அற்புதமானமுறையில் உலகை உண்டான் பெருமான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.