தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

செ.குளோரியான்

பாடல் - 11

ஊழிதோறும் ஊழி உருவும் பேரும்
செய்கையும் வேறவன், வையம் காக்கும்
ஆழி நீர்வண்ணனை, அச்சுதனை
அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழ்இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள்
இவை திருப்பேரெயில் மேய பத்தும்
ஆழி அம் கையனை ஏத்தவல்லார்
அவர் அடிமைத்திறத்து ஆழியாரே.

ஒவ்வோர் ஊழிக்காலத்திலும் வெவ்வேறு திருவுருவம், வெவ்வேறு திருப்பெயர், வெவ்வேறு திருச்செய்கைகள் என பக்தர்களுக்கு அருள்கிறவன், வையத்தைக் காக்கும் கடல்நீர்வண்ணன், அச்சுதன், எம்பெருமான், அந்தப் பெருமானைப்பற்றி அழகிய குருகூர்ச் சடகோபன் பாடிய ஒப்பற்ற அந்தாதிப் பாடல்கள் ஆயிரம், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களும் திருப்பேரெயிலைப்பற்றியவை. இந்தப் பாடல்களைப் பாடி, சக்ராயுதத்தைக் கையிலேந்திய அப்பெருமானைப் போற்றவல்லவர்கள், சக்கரத்தாழ்வாரைப்போல் அவனுக்கு அடிமையாகித் திருப்பணிகளைப் புரிவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.