தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

செ.குளோரியான்


பாடல் - 9

திறத்துக்கே துப்புரவாம் திருமாலின் சீர்
இறப்பு,எதிர்காலம் பருகிலும் ஆர்வனோ?
மறப்பு இலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை
உறப் பல இன் கவி சொன்ன உதவிக்கே?

எம்பெருமானை நினைக்காதவன் நான். ஆனால் அவரோ, என்னைத் தன்னாக்கி, என்னாலே தன்னைப் பொருத்தமான பல இனிய கவிகளால் பாடிக்கொண்டார். எப்பேர்ப்பட்ட கருணை இது! எதையும் பொருத்தமாகச் செய்யக்கூடிய சிறப்புடையவர் அந்தத் திருமால். அவருடைய சிறப்பைப் பாட நிகழ்காலம் போதுமா? கடந்தகாலம், எதிர்காலத்தையும் சேர்த்துக்கொண்டு அவரை அனுபவிக்கவேண்டுமே, அப்போதும் திருப்தி உண்டாகாதே.

***

பாடல் - 10

உதவிக் கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கு அவன்தன்னது, என்னால் தன்னைப்
பதவிய இன் கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஒன்று இல்லை செய்வது இங்கும் அங்கே.

என்னால் தன்னை மென்மையான இனிய கவிகளால் பாடிக்கொண்டார் நம் அப்பன். அவருக்குக் கைம்மாறாக என்ன தரலாம்? என்னுடைய உயிரைத் தரலாம் என்று நினைத்தேன். ஆனால், அந்த உயிரும் அவருடையதுதானே? (அவர் தந்த உயிரை அவருக்கே திருப்பித்தருவது எப்படி?) ஆகவே, எம்பெருமானுக்குக் கைம்மாறாக என்னால் எதையும் தரமுடியாது, இந்த உலகத்திலும் சரி, அந்த உலகத்திலும் சரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.