தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

செ.குளோரியான்


பாடல் - 3

ஆம் முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்
நாமுதல் வந்து புகுந்து நல் இன் கவி
தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய்முதல் அப்பனை என்று மறப்பனோ.

எம்பெருமான், தன்மீது எனக்குத் தெளிவு ஏற்படும்படி, ‘ஆம், முதல்வன் இவனே’ என்று விளக்கினான், என்னுடைய நாவில் வந்து புகுந்தான், நல்ல இனிய கவிகளைச் சொன்னான், அவற்றின்மூலம் தூய்மையான பக்தர்கள் தன்னை அறியும்படி தானே விளக்கினான், நான் பேசக் காரணமாகத் திகழும் அந்த அப்பனை நான் மறப்பேனா? (மாட்டேன்.)

***

பாடல் - 4

அப்பனை என்று மறப்பன்? என் ஆகியே
தப்புதல் இன்றித் தனைக் கவிதான் சொல்லி
ஒப்பு இல்லாத் தீவினையேனை உயக்கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர் கண்டே.

எம்பெருமான் நானாக மாறி, தவறில்லாதமுறையில் தன்னைத் தானே கவி பாடிக்கொண்டான், யாரோடும் ஒப்பிட இயலாத அளவுக்குத் தீவினைகளைச் செய்த என்னையும் அவன் உய்யச்செய்தான், என்னைத் திருத்தி வாழச்செய்தான், அந்தச் சிறப்பை உணர்ந்தபிறகு, நம் அப்பனை நான் மறப்பேனா? (மாட்டேன்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.