தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

செ.குளோரியான்


பாடல் - 1

மாயா, வாமனனே, மதுசூதா, நீ அருளாய்,
தீயாய், நீராய், நிலனாய், விசும்பாய்க் காலாய்த்
தாயாய்த் தந்தையாய், மக்களாய், மற்றுமாய்,
                                                                                 முற்றுமாய்
நீயாய் நீ நின்றவாறு, இவை என்ன நியாயங்களே.

மாயனே, வாமனனே, மதுசூதனனே, தீயாக, நீராக, நிலமாக, வானாக, காற்றாக, தாயாக, தந்தையாக, மக்களாக, மற்ற உறவினர்களாக, இன்னும் மீதமுள்ள அனைத்துமாக நிற்கிறவன் நீ, அதேசமயம், உன்னுடைய திருவுருவமாகியும் நிற்கிறாய், இவையெல்லாம் என்ன தன்மைகளோ! எங்களுக்கு அருள்புரிவாய்.

***

பாடல் - 2

அம் கள் மலர்த் தண் துழாய் முடி அச்சுதனே,
                                                                    அருளாய்,
திங்களும் ஞாயிறுமாய்ச் செழும் பல்சுடராய்,
                                                                   இருளாய்ப்
பொங்கு பொழி மழையாய்ப் புகழாய்ப் பழியாய்ப்
                                                                   பின்னும் நீ
வெம் கண் வெம் கூற்றமுமாம், இவை என்ன
                                                                   விசித்திரமே.

அழகிய, தேனோடு கூடிய மலர் நிறைந்த, குளிர்ந்த திருத்துழாயைத் திருமுடியிலே சூடிய அச்சுதனே, சந்திரனாக, சூரியனாக, செழுமையான பல சுடர்களாக, இருளாக, பொங்கிப் பொழிகிற மழையாக, புகழாக, பழியாகத் திகழ்கிற நீ, அதன்பின்னே கொடுமையையுடைய வெம்மையான எமனாகவும் இருக்கிறாய், இவையெல்லாம் என்ன விசித்திரமோ! எங்களுக்கு அருள்புரிவாய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.