தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

செ.குளோரியான்


பாடல் - 5

என்றும் நின்றே திகழும் செய்ய ஈன் சுடர்
                                வெண் மின்னுக்கொல்,
அன்றி, என் ஆவி அடு மணி முத்தம்கொலோ,
                                அறியேன்,
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்,
ஒன்றும் அறிகின்றிலேன், அன்னைமீர், எனக்கு
                                 உய்வு இடமே.

அன்னைமார்களே, கோவர்த்தன மலையை எடுத்த எம்பெருமானின் புன்னகையானது, என்றைக்கும் நிலைத்து நிற்கிற, சிவந்த சுடரை வெளிப்படுத்துகிற வெண்மையான மின்னல்தானோ? அல்லது, என்னுடைய உயிரை வருத்தும் அழகிய முத்துகளோ? நான் அறியேன். அப்பெருமானின் புன்னகை, என்னுடைய உயிரை வருத்துகிறது. நான் உய்வதற்கான இடத்தை
அறியாதவளாக இருக்கிறேன்.

***

பாடல் - 6

உய்விடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும்
                                      அரக்கர்கட்கும்
எவ்விடம் என்று இலங்கி மகரம் தழைக்கும்
                                     தளிர்கொல்,
பை, விடப் பாம்பு அணையான் திருக்குண்டலக்
                                     காதுகளே,
கைவிடல் ஒன்றும் இன்றி அடுகின்றன,
                                    காண்மின்களே.

படமெடுக்கின்ற, நஞ்சையுடைய பாம்பாகிய ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்ட எம்பெருமானின் திருக்குண்டலம் அணிந்த திருக்காதுகள், மீன் வடிவில் தழைத்த தளிர்களோ? பெண்களுக்கும் அசுரர்களுக்கும் அரக்கர்களுக்கும் உய்விடமே இல்லாதபடி அவை துன்புறுத்துகின்றனவே! (அசுரர்கள், அரக்கர்கள் எம்பெருமானின் அழகைக் கண்டு தாங்கமுடியாமல் அழிவார்கள், பெண்களோ அந்த அழகைப் பெறமுடியாமல் ஏங்கி அழிவார்கள். ஆகவே, இவர்கள் மூவருமே உய்வதற்கு வழியில்லை.) பாருங்கள், அந்தக் காதுகள் சிறிதும் இடைவெளியின்றி (என்னைப்போன்ற பெண்களை) வருத்திக்கொண்டே இருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.