

பாடல் 9
வயிற்றில் கொண்டு நின்றொழிந்தாரும் யவரும்
வயிற்றில் கொண்டு நின்று ஒரு மூ உலகும் தம்
வயிற்றில் கொண்டு நின்றவண்ணம் நின்ற மாலை
வயிற்றில் கொண்டு மன்னவைத்தேன் மதியாலே.
தாய் தன் குழந்தையை வயிற்றில் வைத்துக் காப்பதுபோலத் தன் நாட்டு மக்களைக் காக்கும் அரசர்கள், அவர்களுக்கும் மேலான தேவர்கள் ஆகியோரைத் தன்னிடத்தில் கொண்டு நிற்பவர், பிரளயத்தின்போது மூன்று உலகங்களையும் தன் வயிற்றிலே கொண்டு நின்றவர், அத்தகைய எம்பெருமானை, திருமாலை, அவர் தந்த அறிவாலே நான் எனக்குள் நிலைக்கச்செய்தேன்.
பாடல் 10
வைத்தேன் மதியால் எனது உள்ளத்து அகத்தே
எய்த்தே ஒழிவேன் அல்லேன் என்றும் எப்போதும்
மொய்த்து ஏய் திரைமோது தண் பாற் கடலுளால்
பைத்து ஏய் சுடர்ப்பாம்பு அணை நம் பரனையே.
அலைகள் நெருங்கி மோதுகிற குளிர்ந்த பாற்கடலிலே, படத்தையுடைய சுடர் வீசும் பாம்பாகிய ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்ட நம் பெருமானை அறிந்தேன், அவரை என் மனத்தினுள் வைத்தேன், இனி என்றைக்கும் எப்போதும் அவரைப் பிரிந்து தளர்ந்துபோகமாட்டேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
விஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு
மீண்டும் நடிக்க வரும் ரம்பா!
வாக்காளர் இறுதிப் பட்டியல்! தருமபுரியில் 12.40 லட்சம் பேர்!
வேலூரில் விஜய் சொன்ன குட்டிக் கதை!
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

