தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

செ.குளோரியான்

பரவி வானவர் ஏத்த நின்ற
பரமனை, பரம்சோதியை,
குரவை கோத்த குழகனை, மணி
வண்ணனை, குடக்கூத்தனை,
அரவம் ஏறி அலைகடல் அமரும்
துயில்கொண்ட அண்ணலை
இரவும் நண்பகலும் விடாது என்றும்
ஏத்துதல் மனம் வைம்மினோ.

வானவர்கள் அனைவரும் போற்றும்படி நின்ற பரமன், சிறந்த சோதிவடிவானவன், குரவைக்கூத்தாடிய இளைஞன், மணிவண்ணன், குடக்கூத்து ஆடியவன், பாற்கடலில் பாம்பணையில் யோகத்துயில்கொள்கிற அண்ணல்… அப்பெருமானை இரவிலும் பகலிலும் விடாமல் போற்ற வேண்டும், இதை மனத்தில் வையுங்கள்.

***

பாடல் - 4

வைம்மின் நும் மனத்து என்று யான் உரைக்கின்ற
மாயவன் சீர்மையை
எம்மனோர்கள் உரைப்பது என்? அது
நிற்க; நாள்தொறும் வானவர்
தம்மை ஆளும் அவனும் நான்முகனும்
சடைமுடி அண்ணலும்
செம்மையால் அவன் பாத பங்கயம்
சிந்தித்து ஏத்தித் திரிவரே.

‘மாயவனை உங்கள் மனத்தில் வையுங்கள்’ என்று நான் சொல்கிறேன். ஆனால், அப்பெருமானின் பெருமையை என்னைப் போன்றவர்கள் சொல்வது ஒரு பெரிய விஷயமா? அதை விடுங்கள். வானவர்களை ஆளுகின்ற இந்திரனும், நான்முகப் பிரம்மனும், சடைமுடி அண்ணலான சிவபெருமானும் அப்பெருமானின் சிறப்பை அறிந்திருக்கிறார்கள், ஆகவே, ஒவ்வொரு நாளும் அவனுடைய திருவடித்தாமரைகளைச் சிந்தித்து, போற்றித் திரிகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.