தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

மூன்றாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 11

வண்டுகள் ஒன்றுசேர்ந்து சத்தமிடுகிற

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:21 pm

செ.குளோரியான்

கூடி வண்டுஅறையும் தண் தார்க்
கொண்டல்போல்வண்ணன்தன்னை
மாடு அலர் பொழில் குருகூர்
வண் சடகோபன்சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார்
வீடுஇல போகம்எய்தி
விரும்புவர் அமர் மொய்த்தே.

வண்டுகள் ஒன்றுசேர்ந்து சத்தமிடுகிற, குளிர்ந்த மாலையை அணிந்த எம்பெருமான், மேகம்போன்ற வண்ணம் கொண்டவன், எல்லாப் பக்கங்களிலும் மலர்கள் சூழ்ந்த சோலைகள் நிறைந்த வளமான ஊர் குருகூர், அவ்வூரைச் சேர்ந்த வள்ளல் சடகோபன் அப்பெருமானை ஆயிரம் பாடல்களில் பாடினார், அந்த ஆயிரம் பாடல்களில் இந்தப் பத்து பாடல்களையும் பாட வல்லவர்களுக்குப் பிரிவில்லாத மோட்ச வாழ்வு கிடைக்கும், தேவர்களும் அவர்களை விரும்புவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.