தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

செ.குளோரியான்

வானவர் ஆதி என்கோ,
வானவர் தெய்வம் என்கோ,
வானவர் போகம் என்கோ,
வானவர் முற்றும் என்கோ,
ஊனம்இல் செல்வம் என்கோ,
ஊனம்இல் சுவர்க்கம் என்கோ,
ஊனம்இல் மோக்கம் என்கோ,
ஒளிமணிவண்ணனையே.

ஒளிநிறைந்த மணிபோன்ற வண்ணம்கொண்ட எம்பெருமானை நான் எப்படி அழைப்பேன்?

வானவர்களின் வாழ்வுக்குக் காரணமான ஆதி முதல்வன் என்பேனா? வானவர்களின் தெய்வம் என்பேனா? வானவர்களின் இன்பம் என்பேனா? வானவர்களுக்கு (இங்கே சொல்லப்படாத) அனைத்தும் என்பேனா? குறையில்லாத செல்வம் என்பேனா? குறையில்லாத சுவர்க்கம் என்பேனா? குறையில்லாத மோட்சம் என்பேனா?

•••

பாடல் - 8

ஒளிமணிவண்ணன் என்கோ,
ஒருவன் என்று ஏத்த நின்ற
நளிர்மதிச் சடையன் என்கோ,
நான்முகக்கடவுள் என்கோ,
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்
படைத்து, அவை ஏத்த நின்ற
களிமலர்த் துளவன் எம்மான்,
கண்ணன், மாயனையே.

உலகங்களையெல்லாம் படைத்து, அன்போடு காத்து, அவை போற்றிப் புகழும்படி நிற்கின்ற பெருமான், தேன் வழியும் மலர்களைக்கொண்ட துளசிமாலை அணிந்தவன், நம் தலைவன், கண்ணன், மாயனை நான் எப்படி அழைப்பேன்?

ஒளிவீசும் மணிபோன்ற வண்ணம்கொண்டவன் என்பேனா? ஒப்பற்றவன் என்று தன்னுடைய அடியவர்களெல்லாம் துதிக்கும்படி நின்ற, குளிர்ந்த சடையைக்கொண்ட சிவபெருமான் என்பேனா? நான்முகக் கடவுளான பிரம்மன் என்பேனா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.