தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

செ.குளோரியான்

சுமந்து மாமலர், நீர், சுடர், தூபம் கொண்டு
அமர்ந்து வானவர் வானவர்கோனொடும்
நமன்றுஎழும் திருவேங்கடம் நம்கட்குச்
சமன்கொள் வீடுதரும் தடம்குன்றமே.

தேவர்கள் தங்களுடைய தலைவனோடு சேர்ந்து மலர்களைச் சுமந்துவந்து, நீர், விளக்கு, வாசனைப்புகை போன்றவற்றைக் கொண்டுவந்து வழிபட்டு வணங்கி எழுகிற திருவேங்கடமலை, அத்தகைய திருவேங்கட மலை நமக்கு ஏற்ற மோட்சத்தைத் தரும் பெரிய குன்றாகும், (அதனை வணங்குவோம்!)

•••

பாடல் - 8

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான், பரன்
சென்றுசேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே.

கோவர்த்தனகிரி என்னும் குன்றைக் கையில் ஏந்திப் பசுக்களையும் ஆயர்களையும் குளிர்ந்த மழையிலிருந்து காத்தவன், அன்றைக்கு வாமனனாக வந்து உலகை அளந்த பிரான், அனைத்திலும் சிறந்தவன், எம்பெருமான், அத்தகைய பெருமான் சென்றுசேரும் திருவேங்கடம் என்னும் உயர்ந்த மலை ஒன்றைத் தொழுதால் போதும், நம் வினைகள் ஓய்ந்துபோகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.