தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

செ.குளோரியான்

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ,
என்நாவில் இன் கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்,
தென்னா தெனா என்று வண்டு முரல் திருவேங்கடத்து
என் ஆனை, என் அப்பன், எம்பெருமான் உளன்ஆகவே.

நான் இதைச் சொன்னால் விரோதம்தான் வரும். ஆனாலும் சொல்கிறேன், கேளுங்கள். ‘தென்னா தென்னா’ என்று வண்டுகள் ஒலிக்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கும் என் யானை, என் அப்பன், எம்பெருமான், அப்பெருமான் இருக்கும்போது, நான் இன்னொருவரைப் பாடமாட்டேன், என் நாவிலிருந்து பிறக்கும் இனிய கவிகளை இன்னொருவருக்குக் கொடுக்கமாட்டேன்.

***

பாடல் - 2

உளன்ஆகவே எண்ணித் தன்னை, ஒன்றாகத் தன் செல்வத்தை
வளனா மதிக்கும் இம்மானிடத்தைக் கவிபாடி என்?
குளன்ஆர் கழனிசூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளன்ஆய எந்தையை, எந்தை பெம்மானை ஒழியவே?

குளங்களும் கழனிகளும் சூழ்ந்த திருக்குறுங்குடியிலே சிறந்த குணங்களுடன் எழுந்தருளியிருக்கும் கண்ணன், நம் தந்தை, நம் குலத்தின் தலைவன், எம்பெருமான், அவனைத் தவிர இன்னொருவரை ஏன் பாட வேண்டும்? தன்னை ஒரு பெரிய மனிதனாகக் கருதிக்கொண்டு, தன்னுடைய செல்வத்தையே வளமாக மதிக்கும் இந்த மானிடர்களைப் பாடி என்ன பயன்?
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.