தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

செ.குளோரியான்

கண்களால் காண வரும்கொல்என்று ஆசையால்
மண்கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல்
பண்கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்துத்
திண்கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே.

கண்களால் காணும்படி எம்பெருமான் வர வேண்டும் என்று என் காதுகள் ஆசைப்படுகின்றன, ஏன் தெரியுமா? வாமனனாக வந்து மூன்றடி மண்ணைப் பெற்ற எம்பெருமான், கருடன்மீது ஏறுகிறான், அது மகிழ்ச்சியோடு செல்கிறது, அப்போது கருடனின் சிறகுகள் அசையும் ஓசை, வேதம்போல் ஒலிக்கிறது, அதைக் கேட்கவேண்டும் என்று என்னுடைய காதுகள் ஏங்குகின்றன.

•••

பாடல் 6

செவிகளால் ஆர நின் கீர்த்திக்கனிஎனும்
கவிகளே காலப்பண் தேன் உறைப்பத் துற்றுப்
புவியின்மேல் பொன் நெடும் சக்கரத்து உன்னையே
அலிவுஇன்றி ஆதரிக்கும் எனது ஆவியே.

எம்பெருமானே, உன்னுடைய புகழைச் சொல்லும் கனிகளாகிய பாடல்களைக் காலத்துக்கேற்ற பண்கள் என்னும் தேனில் தோய்த்துப் பாட வேண்டும், அதை நிறையக் கேட்க வேண்டும் என்றே என் காதுகள் விரும்புகின்றன, இந்தப் பூமியிலே, என்னுடைய உயிர், அழகிய, நீண்ட சக்ராயுதத்தை ஏந்திய பெருமானாகிய உன்னையே இடைவெளியின்றி விரும்பும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.