தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

செ.குளோரியான்

முடியானேஎ, மூஉலகும் தொழுது ஏத்தும் சீர்
அடியானேஎ, ஆழ்கடலைக் கடைந்தாய், புள்ஊர்
கொடியானேஎ, கொண்டல்வண்ணா, அண்டத்து உம்பரில்
நெடியானேஎ, என்று கிடக்கும் என் நெஞ்சமே.

அழகிய திருமுடியைக்கொண்டவனே, மூன்று உலகங்களும் தொழுது போற்றுகிற சிறப்புநிறைந்த திருவடிகளைக்கொண்டவனே, ஆழ்கடலைக் கடைந்தவனே, கருடனை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டவனே, மேகவண்ணனே, தேவர்களுக்கெல்லாம் பெரியவனே... இவ்வாறு எம்பெருமான் பெருமைகளைச் சொல்லிக்கொண்டு கிடக்கும் என் நெஞ்சம்.

•••

பாடல் 2

நெஞ்சமே நீள்நகராக இருந்த என்
தஞ்சனே, தண் இலங்கைக்கு இறையைச் செற்ற
நஞ்சனே, ஞாலம் கொள்வான் குறள்ஆகிய
வஞ்சனே என்னும் எப்போதும் என் வாசகமே.

என் நெஞ்சையே தன்னுடைய தங்குமிடமாக ஆக்கிக்கொண்டவனே, என் தலைவனே, குளிர்ந்த இலங்கையின் தலைவனான ராவணனுக்கு நஞ்சாகி அவனை அழித்தவனே, மகாபலியிடம் உலகைப் பெற்றுக் காப்பதற்காக சிறிய உருவில் வந்து அவனை வஞ்சித்த வாமனனே... இவ்வாறு எம்பெருமான் பெருமைகளை நான் எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பேன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.