தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

செ.குளோரியான்

கண்கள் காண்டற்கு அரியனாய்,
கருத்துக்கு நன்றும் எளியனாய்,
மண்கொள் ஞாலத்து உயிர்க்குஎலாம் அருள்
செய்யும் வானவர் ஈசனைப்
பண்கொள் சோலை வழுதி வளநாடன்
குருகைக்கோன் சடகோபன் சொல்
பண்கொள் ஆயிரத்து இப்பத்தால்
பத்தர் ஆகக்கூடும், பயிலுமினே.

எம்பெருமானைக் கண்களால் காண்பது அரிது, மனத்தால் உணர்வது எளிது, இந்தப் பூமியில் உள்ள உயிர்கள் அனைத்துக்கும் அருள்செய்கிறவன், விண்ணோருக்கு இறைவன், அத்தகைய பெருமானைப் பற்றி, வண்டுகளின் இசை நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட திருவழுதி எனும் வளமான நாட்டைச் சேர்ந்த திருக்குருகூரின் தலைவர் சடகோபர் இசையோடு கூடிய ஆயிரம் பாடல்களைப் பாடினார், அந்த ஆயிரத்தில் இந்தப் பத்து பாடல்களையும் பயின்றால், நீங்களும் பக்தர்கள் ஆகலாம், பயிலுங்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.