மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

என்றும்  என்  இதயத்தில்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

ஜெய்ப்பூர் கற்களாய்
ஜொலிக்கும் முகம் –
உன் கண்களில்

எத்தனை கானங்கள் –
பார்வையில் தாகம் பார்த்திருக்கிறேன்
ராகம் காண்கிறேன் இன்று –

பற்களில் பதுக்கிய
ரேடியம் – குழப்பத்தில் பியரி க்யூரி--
சொர்க்கம் தெரிந்ததால்
உன் சொற்களில்
பொருள் தேடியதில்லை –
இளம்பூவாய் தொடத்தூண்டும்
உதடுகள் – பின்
சாயம் எதற்கு ? இருக்கட்டும் --
எனக்குத்தெரியும்

என்றுமே நீ உன் மனதிற்கு
சாயம் பூசியதில்லை—
என் அகவரியில்
உன் முகவரி பதித்து
என் தலையெழுத்தை சுகவரிகளாய்
மாற்றியவளே !!
உனக்காக,
நீ வந்து அமர ,
என்றுமே என் இதயத்தில்
நான்கு அறைகள் !!  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.