2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

யார் இட்ட சாபம்: கவிஞர் ராம்க்ருஷ்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

நெற்களஞ்சியமாம் தஞ்சையைத் தரிசாக்கும்அற்பச் செயல்களையே தினமும் செய்திடலாமோபொற்பதங்கள் வைத்துப் பையப் பைய நடந்தகற்பகத் தருவாம் காவிரியை வஞ்சித்திடலாமோகவின்மிகு கலைகள் வளர்த்தே அனுதினமும்புவிமீது கொண்ட ஆசையினாலே தமிழகத்திலேகுவிந்த குளிர்தரு நிழலாய் மரஞ் செடி கொடிகளெனகவிபாடிய அன்பில் விவசாயம் செழித்திட உதவியகாவிரித் தாயை வைத்துப் போராடும் இழிநிலைஆவியாய்ச் சுற்ற சாபம் இட்டதும் யாரோபாவியாய் புவியில் விவசாயிகள் துன்பப்படவாகூவிக் கேட்டும் நீரில்லா நிலை யார் இட்ட சாபம்அரசியல் மக்கள் நலனுக்கே என்ற நிலை மாற்றிஉரசும் சொந்தங்கள் வாழவே எனப் புரிந்துகொண்டுசிரசு வரை ஊழலில் திளைக்கும் அரசியலார் வாழமுரசு கொட்டும் முட்டாள் தனம்  யார் இட்ட சாபமோஅதிகார போதை தலைக் கேற சதிகார அம்புகளைகதியற்ற ஏழைகளின்மீது பாய்ச்சி பணம் பிடுங்கும்சதிகாரப் பணியாளரின் ஈவு இரக்கமில்லாத் தன்மைகுதிபோட லஞ்சம் தலைவிரித்தாட சாபம் இட்டது யாரோசாதிமத வேறுபாடுகள் தீர்க்க முடியா நோயாகியேஆதியிலிருந்தே அடிதடியும் ஆதிக்கமுமாய் இன்றும்வாதியற்ற வழக்காகித் தொடரும் அன்பற்ற நிலைஓதியும் உணராதபடி சாபம் இட்டதும் யாரோ யாரோ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.