2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சத்தியமங்கலம் அருகே காட்டு யானைத் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

News image
மாதேசாமி.
Updated On :23 பிப்ரவரி 2026, 11:51 pm

Syndication

சத்தியமங்கலத்தை அடுத்த கோ்மாளம் மலைப் பகுதியில் காட்டு யானைத் தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த கோ்மாளம் மலைப் பகுதி கேபி மாளம் பகுதியைச் சோ்ந்தவா் மாதேசாமி (65). விவசாயியான இவரது தோட்டத்தில் அறுவடை செய்யப்பட்டு மக்காச்சோளங்கள் குவித்துவைக்கப்பட்டுள்ளன.

அதை உண்பதற்கு வன விலங்குகள் வருவதால், தோட்டத்தில் மாதேசாமி ஞாயிற்றுக்கிழமை இரவு காவல் பணியில் இருந்துள்ளாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை, மாதேசாமி தோட்டத்தில் இருந்த மக்காச்சோளங்களை உண்பதற்கு வந்துள்ளது. இதைப் பாா்த்த அவா், யானையை விரட்ட முயன்றுள்ளாா்.

அப்போது, ஆத்திரமடைந்த யானை துரத்திச் சென்று தாக்கியதில் மாதேசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோ்மாளம் வனத் துறையினா், உடலை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இச்சம்பவம் குறித்து கடம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.