/

ஒருமுறையேனும்: பி.பிரசாத்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:26 pm

கவிதைமணி

ஒருங்கிணைத்து, வழிகாட்டி  ஒருகுழுவை நடத்திடவேஒருதலைவன் வேண்டுமதில்  சந்தேகம் ஏதுமிலை !தலைவனவன் காட்டும்வழி  கண்மூடி செல்லுதலோவலைதன்னில் வலிந்தேநாம்   வீழ்தல்போல் ஆகிடுமே !சொன்னவழி நல்வழியா?  சிறந்ததொரு நன்முறையா?என்றுஒரு முறையேனும்  சுயமாக சிந்திப்போம் !தவறென்றால் தலைவனிடம்  தயங்காமல் எடுத்துரைப்போம் !எவருக்கும் பயந்தேநாம்  எதையும்தான் செய்யோமே !சரியென்ற வழியதுவே  நமைசேர்க்கும் நல்லிடமே!'சரி'யென்று யாவைக்கும்..  சரியின்று சொல்லோமே !ஆடுகளின் கூட்டம்போல்  அலைந்தேபின் செல்லோமே !கேடுவரும் எனதெரிந்தும்   கெட்டவழி செல்லோமே !ஒருமுறையே தானும்நாம்  செய்யும்முன் சிந்திப்போம் !ஒருகுறையும் வாராதே !  வந்தாலும் எதிர்கொள்வோம் !எண்ணியேநீ துணிகவென‌   சொன்னானே அன்றேதான் !கண்மூடி செல்லாமல்   கருத்தோடு சிந்திப்போம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.