தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

மிச்சத்தைமீட்போம்: ஆர்.அருண்குமார் 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:26 pm

கவிதைமணி

பழங்கதை பேசி பாடித் திரிந்தவர்கள்
பாரத பெருமையை மறந்துவிட்டோம்.
புதுமை என்ற பெயரைச் சொல்லி
புரியாத புதிராக மாறிவிட்டோம்.

அரிய புராணங்கள் அறிந்தவர்கள்
அழிவை நோக்கிச் சென்றனர்.
சிறிய நிகழ்வைப் பெரிதாக்கியே
சிந்தையை மாற்றிக்கொண்டோம்.

பெருமைகள் நிறைந்த பூமியில்
பேரிடர் நிறைந்து போனதே.
அருமை தெரியா மானிடர்கள்
அற்புதம் அறியா மூடர்களே.

எத்தனையோ அதிசயங்கள்
எத்தர்களால் அழிந்தன.
பித்தனாக தன்னை மாற்றியே 
பிதற்றத் தொடங்கிவிட்டனரே.   

விந்தை மிகு பூமி வாழவே 
விசித்திரம் போற்றுவோம்.
மிச்சத்தை மீட்டிடுவோம்
மேன்மையைக் காத்திடுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.