தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

வெல்லும் சொல்; ரா.பார்த்தசாரதி 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

பழகும் விதத்தில் பழகினால் பகைவனும் நண்பனே 
சொல்லும் விதத்தில் சொன்னால் தலையாட்டுவானே
பேசும் பேச்சும்,சொல்லில் நயமும் நம்மை உயர்த்திடுமே 

பிறர் விரும்பும்  சொல்லைக் கூறினாலே புகழுண்டாகுமே!
சொல்வன்மை என்றாலே சொல்லை திறம்பட கூறுபவனே 
பிறர்மனம் நோகாமல் சொல்லை சொல்பவன் நல்லவனே 
இனிய சொற்கள் இருக்கும்போது தீச்சொல் கூறுவானேன் 
பழமாக இனிய சொல்லிருக்க, காயை சாப்பிடுவது தீமைதானே !

அவையறிந்து சொல்லைச் சொல்பவன்  அறிவுடையவன் ஆவான் 
தவறான சொல்லை சொல்பவனே  முட்டாள் எனப்படுவான் 
சொல்லாற்றல்  மனிதனை  என்றும் மண்டியிடச் செய்யாது 
எவர் எதிர்த்து வரினும்  அவர் எதிரில் தலை வணங்காது !

சொன்னதை எல்லாமே  உடனே  செய்துவிட  முடியுமா 
காலம் கருதி, உரிய சந்தர்ப்பத்தில் சொல்ல வேண்டாமா 
பழி  பாவங்கள் வராமல் பார்த்து எடுத்துரைக்கவேண்டாமா 
நியாத்தை  நினைந்து  உண்மையை நிலைநாட்டவேண்டாமா!

கவிஞ்சன் சொல்லைக்  கொண்டு வெல்லும் கவிதை புனைகிறான் 
பேச்சாளனோ பேச்சாற்றலால்  சபையில்  மதிக்கப்படுகின்றான் 
சொல்லாமல் சொன்ன சொல்லுக்கு  ஏதாவது விலையுண்டா 
வெல்லும்  சொல்லை  உடையவனுக்கு  பகைமை  உண்டா !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.