வெல்லும் சொல்: கவிஞர் பூ.சுப்ரமணியன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

ஆசையே துன்பத்திற்கு காரணம்’ஆசைக்கு அணை போட்டஅன்பான புத்தர் வாக்குஅர்த்தம் உள்ள சொல்வாக்கு !‘ஒரு கன்னத்தில் அறைந்தால்மறு கன்னத்தை திருப்பிக் காட்டு ‘ஏசுநாதரின் சொல்வாக்குமாசுபட சினம் கொள்பவரைபசுபோல் பணியச் செய்துவிடும் !சத்திய வாக்கை தவறாமல்கடைபிடித்து வாழ்ந்தஅரிச்சந்திரன் வரலாறுஅன்று கண்ட காந்தியைஇன்று சத்தியசோதனைஎழுத வைத்துவாழ்வில் மகாத்மாவாக்கியது !வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம்வாடிய வள்ளலார்வடித்த சொற்கள்– இன்றுஉலக மக்களிடையே உயிர் இரக்கம் வளர்த்தது !அடித்தாலும் உதைத்தாலும்பள்ளிக்குச் செல்லாத பிள்ளைபடித்தால் வாழ்வில்கொடிபோல் உயரலாம் அன்னையின் சொற்கள்பள்ளிக்கு செல்ல வைத்தது !எமனிடம்‘என் கணவன் இல்லாமல்குழந்தை வரம் பலிக்குமா?!’கேட்ட சத்யவான்சாவித்திரிகேள்விக் கணையேசத்யவான் உயிரைமீட்கும்வெல்லும் சொல்லானது !கல்லும் கசிந்துருககள்ளமில்லாப் பிள்ளைபோல்சொல்லும் செயலுமிருந்தால்வாழ்வில் உனக்குவெல்லும் இனிய சொல் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...