/

கவிதைமணி

ஒரு மழை இரவு 
குழந்தை பருவமாக இருந்தால்
குதித்து கும்மாளமிடலாம்
வாலிப பருவமாச்சே!
மழை வலுக்க வலுக்க
கொஞ்ச நஞ்சமிருந்த
பகலும் இரவுக்குள் அடமானம் ஆனது
அதென்னவோ மழை தூறல் விழுந்தாலே
எங்க ஊர் மின்சாரம்                                                        
காணாமல் போய்விடும்
பகலாயிருந்தாலும் வேடிக்கை பார்க்கலாம்
இரவாயிற்றே ஒருவர் முகம்
ஒருவருக்குத்தெரியாது
அதுவும் கூட வசதிதான்
அறைக்கதவை சாத்திவிட்டு
படுக்கையில் விழுந்தேன்
இரவு நேரஅமைதி கூட
கடல் அலையாய்
ஆர்ப்பரித்த்து என்னுள்
முந்தையஒரு மழை நாளில்
நானும் அவளும்
பற்றிய கைகளினூடே
பார்த்த விழிகளோடு படர்ந்த காதல்
மழையால்  நெருக்கமாய்  இறுக்கமாய்
மழைத்துளியின் வாசனையில்----
தம்பி சாப்பிடவாடா அம்மாவின் குரலால்
களைந்து எழுந்தேன்
உறங்கி கிடக்கும் உணர்ச்சிகளை
கிளர்த்திவிட்டுப்போவதில்
குரூர திருப்தி இரவு நேர மழைக்கு

- சரஸ்வதி ராசேந்திரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.