/

கவிதைமணி

எத்தனையோ இரவுகள் வந்து 
போகும் ஆனாலும் சிறப்பு அழகு
மழை இரவு நீங்காத சிதறல் ஓசை
மனதை தட்டி எழுப்பும் இசை

கவிதைகளும் இயற்கை கனவு
அதில் எழும் எழுச்சி இன்பம்
காதில் விழும் நீரோசை காண
கண்கோடி வேண்டும் இசை இரவு 

இடியின் இசை மின்னலின்
வெட்டல் வேகம் இருட்டின் அழகு
ஓயாமல் பெய்யும் மழை ரசிக்க
மழை இரவு இயற்கையின் வரம்

இருண்டு கிடக்கும் வானில் புது
தோற்றம் நொடி மறைவு மின்னல்
அதன் தாக்கம் ஒரு  இடிசத்தம் 
மழை இரவு மெளனம் ஜொலிப்பு

குழந்தைகள் ஆனந்தம் துடிப்பு
எதிர்பார்ப்பு வேடிக்கை மகிழ்ச்சி
குதூகல கொண்டாட்டம்  மழை
இரவு மனதின் இன்ப நிறைவு 

எத்தனை இரவுகளிலும் மனமது
மறக்காத இரவு முதல் இரவும்
மழை  இரவும்   மட்டுமே  துளிர் 
விடும் சிந்தனை புதுமகிழ்ச்சியே

நினைவுகளை கடந்த கால 
வாழ்க்கையை அசை போட
மனம் அதில் திளைக்க உகந்த
காலம் என்றும் மழை இரவே
 
தூய மண்வாசனையை  நுகர 
இயற்கையின் வர்ண ஜாலத்தை
ரசிக்க ஒரே ஒரு மழை இரவு
போதாது தொடரட்டும் நல்லிரவு

- சீர்காழி .ஆர்.சீதாராமன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.