/

கவிதைமணி

நள்ளிரவு 
இருளில் கோடு வரையும்
வெள்ளைமழை

தூரத்து மலையில் இருந்து
அவசரமாய் இறங்கும்
அருவி

அமைதியாகக் குளிக்கும்
சாலைகள்

புதுசிவன் புதுநக்கீரன் சொற்போர்
பூக்களைத் தழுவிய மழைக்கு
மணமுண்டா?

தாமரைக் குளத்தில் 
தவளைகள் நடத்தும் 
விவாத அரங்கு 

மூடிய அறைக்குள் குறட்டைவிடும் உன்னை
நிராகரித்து நடக்கிறது
மழையிரவு

- கோ. மன்றவாணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.