மழை இரவு


நிலவை பூட்டி வைத்தது
கருப்பா வெளுப்பா என்று தெரியாத
சில இருட்டு மேகங்கள்—
இந்த பூமியை நனைக்க
என்னைப் பயன்படுத்தினாயே
என்று ஆனந்தக்கண்ணீரை
தரைகளில் கசக்கியது இரவு –
வானத்தில் கட்டிய தேன்கூடுகளை
இரவில் உடைத்தது யார்
என்ற ஐயம், ருசித்த இளைஞர்களுக்கு—
மழை இரவில்
மனமுவந்து நடனமாடியவர்கள்
வெய்யிலைப் போற்றுவரோ ?
குடை இல்லை
என்று மகிழ்ந்தவர்கள்
உலகத்தை ரசிக்கத்தெரிந்தவர்கள் –
சொட்டும் மழையை விடு –
கொட்டும் மழையில்
சில குடிசைகள்
சிணுங்கி அழும் –
அவை மேலே பட்டும்,
உடல் உழைத்த அசதியில்
சில ஏழைகளின்
உறக்க ஊர்வலத்தில்
தடையே இல்லை –
மகிழ்ச்சியில் சில தவளைகளின்
அன்புச்சத்தங்களை
செவியில் வாங்கியபடி, கையில்
சூடான தேநீரும் , சுஜாதா நாவலுமாய்
ஜன்னலோரத்தில் மழையிரவில் நான் –
- கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி -- MD DNB PhD
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...