/

கவிதைமணி

இலைப் பிரதேசங்களிலிருந்து பூமித்தாய்க்கு 
இலவச சொட்டு நீர்ப் பாசன விநியோகம். 
மரக் கூடுகளிலிருந்து தேகம் சிலிர்த்த வண்ணம்
விண்வீதியில் கிளர்ந்த புள்ளினங்கள்.
நடுக்கம் தெளிந்து நடுவீதிக்கு ஏகும் 
ஒடுங்கி இருந்த ஐந்தறிவு ஜீவன்கள்.
முந்தைய இரவு முழுமையாக முக்காடு விலக்கியது  
வானம் என்பதை பறைசாற்றிய நிகழ்வுகள். 
பசுமைப் புரட்சிக்காரர்களின் ஏகோபித்த சந்தோஷங்கள். 
படுக்க இடமில்லாத தெருச்சொந்தங்களின் சாபங்கள். 
எது எப்படியோ, சந்தோஷமாக மழையில் 
நனைந்த குடைகள் பாவாடை 
விரித்து படுத்திருந்திருந்தன
வீட்டின் நுழைவாயில் நடைபாதையில். 

- பான்ஸ்லே. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.