/

கவிதைமணி

மேகக் கூட்டங்களுடன்
மோதிய முழு மதி
தோற்றுப் போனதால்
இடி விழுமென பயந்த
மும்முனை மின்சாரம்
ஓடி ஒளிந்துகொண்டது
மேகம் சுமந்த நீரை
மெதுவாகப் பொழிந்து
மண்ணுக்குப் பரிசளித்து
மின்னல் விளக்கால்
இருட்டின் அழகை
வெளிச்சமிட்டுக் காட்டியது
அந்த மழை இரவு!

- சு.ஜெயக்குமார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.