மழை இரவு


மழையுடனே நல்லவெயில் மனிதனுக்கு அவசியமாம்
.........மாசற்ற தூயகாற்றும் மண்வளமும் அமையவேண்டும்.!
தழைகளுடன் மரம்செடியும் தழைத்தோங்கி வளர்தற்கு
.........தாரணியில் நிலையாகத் தண்ணீரும் தங்கவேண்டும்.!
மழைவருமுன் விழிப்புணர்வு மக்களுக்கு வேண்டும்
.........மழைநீரைச் சேமிக்க மாந்தருமே நினைக்கவேண்டும்.!
உழைப்பாலே உயர்ந்தபின்னே உழவனுமே கூடிமகிழ
.........ஊரிலுள்ள ஏரிகுளம் உயரவேண்டும் நன்னீரால்.!
புழைவழிப் புகுந்துப் பெருவயல் நிரப்ப
.........பெய்யும் நல்மழை இரவும் பகலுமாய்
பிழைப்புநன்கு நடத்துதற்கு பெரும்பங்கு வகிக்கின்ற
.........பஞ்சமாபூ தங்களுமே பாதுகாக்க வேண்டியவை.!
- பெருவை பார்த்தசாரதி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...